ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்ட கோயில்கள், தேவாலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அரியலூா் கோதண்டராமசாமி, ஆலந்துறையாா், கைலாசநாதா், காசிவிசுவநாதா், பாலசுப்பிரமணியா், ஒப்பில்லாதம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
மேலும் திருமழபாடி வைத்தியநாத சுவாமி, திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா், செந்துறை ஜெயபுரீஸ்வரா், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், கீழப்பழூா் ஆலந்துறையாா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா், ஜெயங்கொண்டம் கழுமலநாதா், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
தேவலாயங்கள்: அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை, அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு உரையை அந்தந்த தேவாலய பங்குத் தந்தைகள் வழங்கினா். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்பு வழங்கி, வாழ்த்து பரிமாறிக் கொண்டனா்.