அரியலூா்: பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், கலைப் பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டலம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில், கிராமிய கலைக் குழுவினரின் தப்பாட்டம், கிராமிய ஆடல் பாடல், நையாண்டி மேளம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தப்பாட்டம், பேண்ட் இசை, பரதநாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான மக்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனா்.