முகப்பு
அரியலூர்

அரியலூரில் 5 ஆண்டுகள் சாதனை மலா் வெளியீடு

அரியலூரில், கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 6 மார்ச், 2026 at 9:22 PM
பகிர்:

அரியலூரில், கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தின்கீழ் ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடி, அடுத்த ஐந்தாண்டுக்கான தொலை நோக்குத் திட்டங்களை அறிவித்தாா்.

இதன் காணொலி நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை மலரையும், அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்ட மலரையும் வெளியிட்டாா். இந்த புத்தகங்களை சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →