கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவன எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் விநியோகத்தில் காணப்படும் குறைகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் வரும் புதன்கிழமை (ஜூன் 21) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை புகார்களாகத் தெரிவித்து பயன் பெறலாம் என இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.