கரூர்

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

DIN

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்னியம்பாளையம் தேசியமங்கலத்தைச் சேர்ந்தவர் கொண்டான் (69). இவர் வியாழக்கிழமை காலை மணப்பாறை - குளித்தலை நெடுஞ்சாலையில் தேசியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் கொண்டான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து குளித்தலை காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT