எரிவாயு உருளையை திருட முயன்ற இளைஞர் கைது
கரூர் அருகே வீட்டு முன் வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அருகே வீட்டு முன் வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூரை அடுத்த உப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). இவரது வீட்டின் முன்பு வைத்திருந்த கியாஸ் சிலிண்டரை சனிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த கந்தசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்து க. பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரித்தபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.பி.பிள்ளமனைக்கனூரைச் சேர்ந்த கிருஷ்ணன்(31) எனத் தெரியவந்தது.