கரூர்

மொபெட் மீது டேங்கர் லாரி மோதி சிறுவன் சாவு

DIN

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மொபெட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 வயது சிறுவன்  உயிரிழந்தார்.
கடவூரை அடுத்த மதகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மொபெட்டில்  மனைவி அம்சவள்ளி (32), மகன் கதிர்வேல் (4), மகள் கோமதி (7) ஆகியோருடன் திருச்சி- பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கோதூர் பஜார் பகுதியில் சென்ற போது எதிரே வந்த டேங்கர் லாரி மொபெட் மீது மோதியது.  இதில் சிறுவன் கதிர்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  அம்சவள்ளி, கோமதி பலத்த காயங்களுடன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் செந்திலைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT