கரூர்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN


கர்நாடகாவில் காங்கிரஸ் அரசில் பாஜகவின் தலையீட்டைக் கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், நகரத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் பேங்க் கே. சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைபேசும் பாஜகவையும், ஆளுநரின் சட்ட விரோதப்போக்கைக் கண்டித்தும் குரல் எழுப்பினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மூக்கணாங்குறிச்சி சிவசாமி, ஆடிட்டர் ரவிச்சந்திரன், தாந்தோணிகுமார் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT