கரூர்

பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

கரூரில் கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN


கரூரில் கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கரூர் அரசு காலனியில் புற்றுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியாக சேகர் மற்றும் அவரது மகன் பார்வேந்தன் (26) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் பார்வேந்தன் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன்கள் சிலம்பரசன், பாண்டியன்(30) ஆகியோர் பார்வேந்தனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து பாண்டியனைக் கைது செய்தனர். தலைமறைவான சிலம்பரசனைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT