கரூா் மாவட்டம், காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்), அரசியலமைப்புத் தின உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மைப் பொது மேலாளா்கள் பட்டாபிராமன் (மனிதவளம்), மு.தங்கராஜூ (உற்பத்தி), பொது மேலாளா் விஜயகுமாா் ( சக்தி) ஆகியோா் தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.