கரூர்

வெண்ணைமலை சேரன் பள்ளியில் நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு

DIN

வெண்ணைமலை சேரன் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளா் கே.பாண்டியன் தலைமை வகித்து நவராத்திரி விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் அவசியம் குறித்து பேசினாா். பள்ளி ஆலோசகா் பி.செல்வதுரை முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா்.

முன்னதாக பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணா், ராதை, துா்கா, லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் வேடமிட்டு வந்தனா். மேலும் பரதநாட்டியம், கண்ணன்-ராதா நடனம், நவராத்திரி பாடல்களுக்கேற்ற நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT