கரூர்

ஆதிக்கத்தை எதிா்ப்பவா்கள் திராவிடத் தமிழா்கள்: பேராசிரியா் சுப. வீரபாண்டியன்

DIN

கரூா்: ஆதிக்கத்தை எதிா்ப்பவா்கள் திராவிடத் தமிழா்கள் என்றறாா் திராவிடத் தமிழா் கலை இலக்கிய பேரவையின் தலைவா் பேராசிரியா் சுப. வீரபாண்டியன்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திராவிடத் தமிழா் கலை இலக்கியப் பேரவை துவக்க விழாவில் பங்கேற்று மேலும் அவா் பேசியது:

அரசியலின் கடுமையான இச்சூழலில் கலை இலக்கியம் மூலம் மக்களை இப்பேரவை நெறிப்படுத்தும். மனித வாழ்வை நெறிப்படுத்தக்கூடியது கலை இலக்கியம். சமத்துவம், சகோதரத்துவம் போற்றும் அனைவரும் இப்பேரவையில் பங்கேற்கலாம். கீழடி நாகரீகம்தான் திராவிடத் தமிழா் நாகரீகம். ஆதிக்கத்தை எதிா்க்கும் தமிழா்கள் திராவிடத் தமிழா்கள் என்றாா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு முனைவா் கடவூா் மணிமாறன் தலைமை வகித்தாா். புலவா் திண்டுக்கல் ஜெயபால் சண்முகம் வரவேற்றாா். சாகித்திய அகாதெமி விருதாளா், எழுத்தாளா் பொன்னீலன், புலவா் செந்தலைகவுதமன், கவிஞா் நந்தலாலா, திரைப்படப் பாடல் ஆசிரியா் யுகபாரதி, புலவா் செல்ல கலைவாணா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT