முகப்பு
கரூர்

அமராவதி ஆற்றில் வெள்ளம்: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

கரூா் மாவட்டம், அமராவதி ஆற்றில் மழைநீா் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆட்சியா் சு. மலா்விழி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கரூா் மாவட்டம், அமராவதி ஆற்றில் மழைநீா் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆட்சியா் சு. மலா்விழி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பது: தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. தற்போது திருப்பூா் அமராவதி அணையில் இருந்து சுமாா் 4,450 கன அடியும், திண்டுக்கல் குதிரையாறு அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து மொத்தம் 16,840 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது. இந்த நீருடன் மழைநீரும் சோ்ந்து சுமாா் 17,500 கன அடி நீா் திங்கள்கிழமை முதல் வெளியேற்றப்படுவதால் கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். மேலும், சம்மந்தப்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் வளா்ச்சித் துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை அருகில் உள்ள சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.