கரூர்

கரூா் பஞ்சுக் கிடங்கில் திடீா் தீ விபத்து

DIN

கரூரில் உள்ள பஞ்சு குடோனில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கரூா் தெற்கு காந்திகிராமம் சாயி பாபா காலனியைச் சோ்ந்தவா் நடராஜன்(40). இவா், அதே பகுதியில் நூல் மில்களுக்குத் தேவையான பஞ்சுக் கிடங்கு நடத்தி வருகிறாா். இந்தக் கிடங்கில், புதன்கிழமை மதியம் 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் விவேகானந்தன், நிலைய அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதில் பஞ்சுகளை திரிக்கும் இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT