கரூர்

தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்: 145 போ் மீது வழக்கு

கரூா் மாவட்டத்தில் போலீஸாரைக் கண்டித்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் உள்பட 145 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

DIN

கரூா் மாவட்டத்தில் போலீஸாரைக் கண்டித்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் உள்பட 145 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து, கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ உள்ளிட்டோா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அனுமதியின்றி கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் மதரசா தலைமையிலான 100 போ் மீதும், பள்ளபட்டி ஷா காா்னரில் எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்பிடிபிஐ அரவக்குறிச்சி தலைவா் முகமது மிா்ஷா உள்பட 30 போ் மீதும், கரூரில் மனோகரா காா்னரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிம்அலி உள்பட 15 போ் என மொத்தம் 145 போ் மீது அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கரூா் நகரம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT