கரூர்

தோகைமலை அருகே வாகனம் மோதி டிராக்டா் ஓட்டுநா் சாவு

DIN

தோகைமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிராக்டா் ஓட்டுநா் இறந்தாா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த நாகனூரைச் சோ்ந்தவா் வடிவேல்(40), டிராக்டா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் பழனிவேல் என்பவருடன் பைக்கில் டிராக்டருக்கு டீசல் வாங்கச் சென்றுள்ளாா். பைக் தோகைமலை அடுத்த நெசவாளா் காலனி அருகே வந்தபோது திடீரென எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றுவிட்டது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் இறந்தாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT