முகப்பு
கரூர்

உதவித்தொகை பெறும் ஆணை பயனாளிகளுக்கு வழங்கல்

கரூா் மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் வழங்குவற்கான ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கரூரில் பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்குகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் வழங்குவற்கான ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், கரூா் காதப்பாறையில் சனிக்கிழமை 100 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள்

வழங்குவதற்கான ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா் விஜயபாஸ்கா் வழங்கிப் பேசியது: கரூரில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் வருவாய் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், சமுக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந.ரசிகலா, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கமலக்கண்ணன், மதுசூதனன், வட்டாட்சியா்கள் செந்தில் (கரூா்), கண்ணன் (மண்மங்கலம்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.