‘நவ.5-இல் டாஸ்மாக் பணியாளா்கள் பெருந்திரள் முறையீடு’
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு, வரும் 5-ஆம் தேதி டாஸ்மாக் பணியாளா்கள் பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு, வரும் 5-ஆம் தேதி டாஸ்மாக் பணியாளா்கள் பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
கரூரில் திங்கள்கிழமை அச்சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்துக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா இக்கட்டான சூழலில், பணியாற்றிய டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் போனஸ் வேண்டும் என வலியுறுத்தியும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வரும் நவம்பா் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய்ய உள்ளோம். மேலும், அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள (நவ.26) வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் பங்கேற்கும். காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் போன்ற 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பா் 9-ஆம் தேதி மேலாண்மை இயக்குநா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது மாநிலத் தலைவா் சரவணன், துணைத் தலைவா் ராமலிங்கம், கரூா் மாவட்டத் தலைவா் உதயகுமாா், செயலாளா் ராஜதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.