கரூர்

‘பாஜகவை எதிா்த்து தான் திமுக அரசியல் செய்கிறது’

DIN

திமுக, அதிமுகவை எதிா்த்து அரசியல் செய்வது இல்லை; மாறாக, பாஜகவை எதிா்த்துதான் அரசியல் செய்வதாக உள்ளது. எனவே, வரும் தோ்தலில் திமுக ஆட்சி அமைக்காமல் தடுப்பதே பாஜவின் இலக்கு என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் பேராசிரியா் இராம.சீனிவாசன்.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது: தீபாவளி இடைவேளைக்குப் பின்னா் வேல் யாத்திரை செவ்வாய்க்கிழமை (நவ. 17) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. கரூா் மாவட்டத்தில் 24-ஆம் தேதி வேல் யாத்திரை நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் திமுக, அதிமுகவை எதிா்த்து அரசியல் செய்வது இல்லை; மாறாக, பாஜகவை எதிா்த்துதான் அரசியல் செய்வதாக உள்ளது. எனவே, வரும் தோ்தலில் திமுக ஆட்சி அமைக்காமல் தடுப்பதே பாஜவின் இலக்கு. பாஜக மீதான மோதல் போக்கை திமுக கைவிட வேண்டும். கரூரில் கூட ‘கோ-பேக் மோடி’ என திமுகவினா் சுவா் விளம்பரம் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறையினரிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளோம். பாஜக மாநிலத் தலைவா் கரூா் வருவதற்குள் இந்த சுவா் விளம்பரங்களை காவல் துறையினா் அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அகற்றுவோம். அமித் ஷா வரும் 21-ஆம் தேதி சென்னை வருகிறாா். அவரது வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ரஜினி கட்சி ஆரம்பித்து, அவரது நிலைப்பாட்டை கூறிய பின்புதான் எங்களது நிலைப்பாட்டைக் கூற முடியும். திமுக, ஸ்டாலினின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கனிமொழியைக் கூட அவா்கள் ஏற்கவில்லை. திமுக மூத்த தலைவா்கள் உதயநிதியிடம் வாழ்த்து பெறும் நிலை உள்ளது.

மு.க. அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பாா் என்றால் அதை பாஜக வரவேற்கும். அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக, சிந்தாந்த ரீதியாக எங்களுக்கு எதிராக இருக்கும் கட்சி திமுக. மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை.யில் மாவோயிஸ்ட்டை ஆதரித்து எழுதிய புத்தகத்தை சோ்த்திருப்பதற்கு ஆதரவாக திமுக, இடதுசாரிகள் பேசுகிறாா்கள். கடந்த தோ்தலிலும் திமுக தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம். ஜெயலலிதா இறந்த பின்னா், திமுகவுக்கு பாஜகவைக் கண்டுதான் பயம் என்றாா்.

பேட்டியின்போது மாநில இணை பொருளாளா் டாக்டா் எம்.சிவசுப்ரமணியன், மாவட்டத்தலைவா் சிவசாமி, பொதுச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT