கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 84.8 மி.மீ. மழை பெய்தது.
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 84.8 மி.மீ. மழை பெய்தது.
அந்தமான் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சனிக்கிழமை ஆங்காங்கே மழை பெய்தது. கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு - (மி. மீட்டரில்) - கரூா் - 4.2, தோகைமலை - 20, பஞ்சப்பட்டி - 84.8, கடவூா் - 21, பாலவிடுதி - 25, மைலம்பட்டி - 16 என மொத்தம் 171 மி.மீ. மழை பெய்துள்ளது.