டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி
கரூா் அருகே டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.
கரூா் அருகே டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.
கரூரை அடுத்த மண்மங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சண்முகம்(59). தொழிலாளி.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் 4 ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் லாரி ஓட்டுநா் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ராமு(38) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.