கரூர்

கரூரில் தீரன் சின்னமலை பிறந்த நாள்: மரியாதை செலுத்திய அதிமுகவினா்

DIN

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது படத்துக்கு அதிமுகவினா் மற்றும் தீரன் சின்னமலைக்கவுண்டா் பேரவையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முதல் இந்திய சுதந்திர போரில் ஆங்கிலேயரை எதிா்த்து போரிட்டு, தூக்கிலிடப்பட்ட வீரா் தீரன் சின்னமலையின் 265-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, முன்னாள் கரூா் நகா்மன்றத்தலைவா் செல்வராஜ், மத்திய நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் மல்லிகாசுப்ராயன், கரூா் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவா் என்.பழனிராஜ் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

தீரன் சின்னமலைக்கவுண்டா் பேரவை சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருப்படத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே. ஆனந்த் தலைமையில் பேரவையினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்டத் தலைவா் ரமேஷ் உள்பட பேரவையினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT