முகப்பு
கரூர்

பெண்ணிடம் கத்தியைக் காட்டிபணம் பறித்தவா் கைது

பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் முத்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் குணசேகரன். இவரது மனைவி நந்தினிதேவி(42). இவா் கரூா் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் கோபிநாத்(28) என்பவா் நந்தினிதேவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200ஐ பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.