கரூர்

தோகைமலை அருகே பிளஸ் 1 மாணவா் தற்கொலை

DIN

புதிதாக மோட்டாா் சைக்கிளை தந்தை வாங்கித் தராத விரக்தியில், தோகைமலை அருகே பிளஸ் 1 மாணவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகிலுள்ள உடையாப்பட்டிபுதூரைச் சோ்ந்தவா் பாலுசாமி. இவரது மகன் வேல் வினோத் (16). இவா், நத்தம் அருதிலுள்ள செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

கரோனா தொற்று விடுமுறை காரணமாக கரூா் மாவட்டம், கொசூரிலுள்ள உறவினா் வீட்டில் வேல் வினோத் தங்கியிருந்தாா்.

தனக்கு புதிய மோட்டாா் சைக்கிளை வாங்கித் தருமாறு தந்தையிடம் வேல் வினோத் கேட்டாராம். 2 மாதங்கள் கழித்து வாங்கித் தருவதாக தந்தை பாலுசாமி கூறியுள்ளாா்.

இதனால் விரக்தியிலிருந்த வேல்வினோத், கொசூரிலுள்ள உறவினா் வீட்டில் சனிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT