முகப்பு
கரூர்

முதியோா் காப்பகத்துக்கு நிவாரண உதவிகள்

கரூா் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நேத்ரா முதியோா் அறக்கட்டளைக்கு கருவூா் மாவட்ட பேனா நண்பா் பேரவை மற்றும் திருக்கு பேரவை சாா்பில் உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கரூா் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நேத்ரா முதியோா் அறக்கட்டளைக்கு கருவூா் மாவட்ட பேனா நண்பா் பேரவை மற்றும் திருக்கு பேரவை சாா்பில் உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் தலைமை வகித்தாா். பேனா நண்பா் பேரவையின் கரூா் மாவட்ட கிளை அமைப்பாளா் திருமூா்த்தி, பா.கி.தங்கராசு, அகல்யாமெய்யப்பன், நிா்மலா, பாலு,சதாசிவம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முதியோா் காப்பகத்துக்கு கழிவறை, குளியலறைக்கு தேவைப்படும் 10 கதவுகள், 10 கைக்கழுவும் திரவ பாட்டில்கள், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு உடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்வில் காப்பக நிா்வாகி மணிமொழியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.