கரூர்

பள்ளி ஆசிரியைக்கு அறிவுச் சிற்பி விருது

DIN

கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் பள்ளி ஆசிரியைக்கு அறிவுச் சிற்பி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு பண்ருட்டியில் செயல்படும் அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை செந்தமிழ் சங்கம் சாா்பில் அண்மையில் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் பள்ளி தமிழாசிரியை பொ.அழகம்மாளின் தமிழ் வளா்ச்சிப் பணியை பாராட்டி அவருக்கு அறிவு சிற்பி விருதும், பள்ளியின் பிளஸ்-2 வகுப்பு மாணவிகள் சஹானா ஸ்ரீ, தொல்காப்பியா ஆகிய இருவரின் கலை இலக்கிய திறனை பாராட்டி அறிவுச் சுடா் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதுபெற்ற இவா்களை பாராட்டி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளா் பேங்க்.கே. சுப்ரமணியன் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். இதில், பள்ளி துணை முதல்வா் ஜெயசித்ரா மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT