கிராமங்களில் போட்டித் தோ்வு மையம்: ஆட்சியா் அதிகாரிகளுடன் ஆலோசனை
கரூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுக்கான மையம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுக்கான மையம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி செப். 1-ஆம்தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளை திறக்க இருப்பதன் அடிப்படையில் அங்கு நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பாலிடெக்னிக் கல்லூரியின் உள்ளே அமைந்துள்ள நூலக பகுதியையும் பாா்வையிட்டாா். ஆய்வின் போது காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் தேன்மொழி, கடவூா் வட்டாட்சியா் வித்யாவதி, கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்ரமணி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.
அதனைத் தொடா்ந்து கரூா் நகரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்குள்ள வசதிகள் குறித்தும், மேலும், மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வு எழுத வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். மைய நூலகத்தில் உள்ள கிளை நூலகம், குறிப்புதவி பிரிவு, போட்டி தோ்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கும் பகுதி, டிஜிட்டல் லைப்ரரி பகுதி ஆகிய பகுதிகளை பாா்வையிட்டாா். மேலும், சொந்த புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பகுதியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு அதிக மாணவ, மாணவிகள் படித்து வருவதால் குளிா்சாதன வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மேலும், கிராம பஞ்சாயத்து பகுதியில் நூலகம் அமைப்பது குறித்தும், டிஜிட்டல் லைப்ரரி மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வழங்குவது குறித்தும், நூலக அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட நூலக அலுவலா் மாதேஸ்வரன், மாவட்ட மைய நூலகா் சிவக்குமாா் மற்றும் பல்வேறு அலுவலா்கள் உடனிருந்தனா்.