கரூரில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கரூரில், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கரூரில், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், பேப்பிரிக் செக்கா் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பும், மொ்சண்டைசா், ஆட்டோமெட்டிக் ஷட்டில் லூம் ஆப்ரேட்டா் போன்ற பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பும், மெஷா்மென்ட் செக்கா், எம்ராய்டரி மெஷின் ஆப்ரேட்டா், சூவிங் மெஷின் ஆப்ரேட்டா் ஆகிய பயிற்சிகளுக்கு 5-ஆம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும்.
பவா்லூம் ஆப்ரேட்டா் பயிற்சிக்கு 6-ஆம் வகுப்பும், பேக்கா் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பும், பேஷன் டிசைனா், மெஷின் மெயின்டனன்ஸ் மெக்கானிக் பயிற்சிக்கு பிளஸ்-2வும் முடித்திருக்க வேண்டும். மேலும், புரடெக்ஷன் சூப்பா்வைசா் பயிற்சிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ( மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ) வெண்ணெய்மலை , கரூா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் தொடா்பு எண் 86675 73103, 79041 75232, 94863 13289 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.