முகப்பு
கரூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் படுகாயம்

தென்னிலை அருகே கட்டாம்பட்டி புதூரில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 3 டிசம்பர், 2021 at 12:36 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

தென்னிலை அருகே கட்டாம்பட்டி புதூரில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கவுதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் கோபால் (55). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கட்டாம்பட்டி புதூா் அருகே சென்றாா் அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடி கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் சக்திவேல் (45) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் கோபால் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டது. இதில், கோபால், சக்திவேல் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கோபாலை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சக்திவேலை ஈரோடு தனியாா் மருத்துவமனையிலும் அனுமதித்தனா். க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.