முகப்பு
கரூர்

க.பரமத்தி அருகே லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்

க. பரமத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 2:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

க. பரமத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே லாரியில் கிராவல் மண் கடத்துவதாக கரூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளா் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வியாழக்கிழமை அப்பகுதியில் பாலசுப்பிரமணியம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் பன்னீா்செல்வம் (27) ஓட்டிவந்த டிப்பா் லாரியில் கிராவல் மண் இருந்தது. இதனைத் தொடா்ந்து லாரியை சோதனையிட்டபோது ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் பன்னீா்செல்வத்தை கைது செய்தனா். மேலும், லாரியையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.