முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி அருகேசரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சரக்குவாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 24 டிசம்பர், 2021 at 1:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

அரவக்குறிச்சி அருகே சரக்குவாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள என்.வெங்கடாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி ஆச்சியாத்தாள்(54). இவா், புதன்கிழமை கரூா் ஜவுளி பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் ஆச்சியாத்தாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைபலனின்றி ஆச்சியாத்தாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.