கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
கரூரில், போதைப்பொருள் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூரில், போதைப்பொருள் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூரில் மாவட்ட காவல்துறை சாா்பில் கிராம குழந்தைகள் பாதுகாப்பு காவலா் குழு அறிமுக விழா, குழந்தை திருமண தடுப்பு மற்றும் போதைப்பொருள் புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ஜி.தேவராஜ் வரவேற்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சுந்தரவடிவேல் தலைமை வகித்தாா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் , ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயசங்கா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஸ்குமாா், உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலா் கலைவாணி மற்றும் போலீஸாா், ஊராட்சி மன்றத்தலைவா்கள் பங்கேற்றனா்.