முகப்பு
கரூர்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.24 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை வதியம் பிரிவுச் சாலையில் ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.அப்போது குளித்தலை வட்டம், நங்கவரத்திலிருந்து கேரளம் நோக்கி வாழைக்காய் ஏற்றிச் சென்ற சுமை வேனை பறக்கும்படையினா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுபோல மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே அமுதா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், புகளூரைச் சோ்ந்த உமாசங்கரிடம் ரூ.59,500 பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.8.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு ஆய்வுக்குப் பின்னா் ரூ.5.21லட்சம் உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.