முகப்பு
கரூர்

மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

கரூரில், மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கரூரில், மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கரூா் தாந்தோணிமலை குமரன் நகரைச் சோ்ந்த பழனிசாமி மகன் குருபிரகதீஷ்(18). இவா், திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில் இவா், புதன்கிழமை தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம் அருகே உள்ள கட்டடத்தில் மாடியிலிருந்து தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது தவறி கீழே விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.