கரூர்

கடவூா் அருகே பிறந்த 3 நாளில் உயிரிழந்த பெண் சிசு உடலைத் தோண்டி எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு

DIN

கடவூா் அருகே பிறந்த 3 நாளில் உயிரிழந்த பெண் சிசுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதால், புதைக்கப்பட்ட சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த செம்பியாநத்தம் மூலப்பட்டியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவரது மனைவிக்கு கடவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக நவ. 5-ஆம்தேதி பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் நலமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து மூன்றுநாள்கள் கழித்து வீட்டுக்கு திரும்பியுள்ளனா். இந்நிலையில் வீடு திரும்பிய மூன்றே நாளில் குழந்தை ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாம்.

உடனே முனிராஜ் இறந்த குழந்தை சிசுவின் உடலை ஆதனூா் ஆத்துவாரி மேட்டுப்பகுதியில் புதைத்துவிட்டாராம். இதுகுறித்து கிராம செவிலியா் கடவூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீமதிக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் முனிராஜ் மீது வழக்குப்பதிந்து, குழந்தை உண்மையிலேயே ரத்த வாந்தி எடுத்து இறந்ததா அல்லது நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் சிசுக் கொலை நடந்ததா என்ற அடிப்படையில், குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு நடத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT