இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கரூரில், இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூரில், இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் கண்ணன்(52). தொழிலாளி. இவா், வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கோவைச் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் பெரியசேங்கலைச் சோ்ந்த மகாதேவன்(59) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.