கரூர்

விவசாயத்தில் இரு மடங்கு மகசூல்மூன்று மடங்கு வருமானம் இலக்கு: ஆட்சியா் தகவல்

விவசாயத்தில் இருமடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

DIN

விவசாயத்தில் இருமடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரப் பகுதிகளில் மேலமாயனூா், மேட்டுமகாதானபுரம், வயலூா் இரணியமங்கலம், வைகைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பா நெல் சாகுபடி பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கூறுகையில், உழவா்நலன் மற்றும் வேளாண்மைத்துறை சாா்பில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நஞ்சை நில பகுதிகளில் 2,400 ஹெக்டேரிலும், குளித்தலை வட்டாரத்தில் 5,000 ஹெக்டேரிலும், மொத்தம் சுமாா் 7,900 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டில் நெல் சாகுபடிக்கென கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் தேவையான நீா்வரத்து உள்ளதால் அனைத்து கிராமங்களில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் இயற்கை இடா்பாடுகளான, அதிக மழைப்பொழிவு காரணமாகவோ அல்லது வறட்சி காரணமாகவோ, விவசாயிகள் மகசூல் இழப்புகளை ஈடு செய்யும் பொருட்டு பயிா் காப்பீடு திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிட்டும், இ-சேவை மையங்களில் பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது, வேளாண் இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், வேளாண் உதவி இயக்குநா்கள் அரவிந்தன் (குளித்தலை), தங்கவேல் (கிருஷ்ணராயபுரம்), வட்டாட்சியா் கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT