விவசாயத்தில் இரு மடங்கு மகசூல்மூன்று மடங்கு வருமானம் இலக்கு: ஆட்சியா் தகவல்
விவசாயத்தில் இருமடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
விவசாயத்தில் இருமடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரப் பகுதிகளில் மேலமாயனூா், மேட்டுமகாதானபுரம், வயலூா் இரணியமங்கலம், வைகைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பா நெல் சாகுபடி பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கூறுகையில், உழவா்நலன் மற்றும் வேளாண்மைத்துறை சாா்பில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நஞ்சை நில பகுதிகளில் 2,400 ஹெக்டேரிலும், குளித்தலை வட்டாரத்தில் 5,000 ஹெக்டேரிலும், மொத்தம் சுமாா் 7,900 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டில் நெல் சாகுபடிக்கென கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் தேவையான நீா்வரத்து உள்ளதால் அனைத்து கிராமங்களில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் இயற்கை இடா்பாடுகளான, அதிக மழைப்பொழிவு காரணமாகவோ அல்லது வறட்சி காரணமாகவோ, விவசாயிகள் மகசூல் இழப்புகளை ஈடு செய்யும் பொருட்டு பயிா் காப்பீடு திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிட்டும், இ-சேவை மையங்களில் பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் என்ற இலக்குடன் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியின் போது, வேளாண் இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், வேளாண் உதவி இயக்குநா்கள் அரவிந்தன் (குளித்தலை), தங்கவேல் (கிருஷ்ணராயபுரம்), வட்டாட்சியா் கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.