முகப்பு
கரூர்

உள்ளாட்சித் தோ்தல்: க.பரமத்தி ஊராட்சியில்ஆட்சியா் ஆய்வு

க.பரமத்தி ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

க.பரமத்தி ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித்தோ்தல் நடைபெறவுள்ள புன்னம் சத்திரம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம், வாக்குப் பதிவுக்கான பொருள்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

பின்னா், புன்னம்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல மையத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பாா்த்து ஆய்வு செய்தாா். அதனைத்தொடா்ந்து குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்கள் முறையாக வழங்கப்படுகிா என்று பெற்றோா்களிடம் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.