இருசக்கர வாகனம் மீதுலாரி மோதி விபத்து; இருவா் பலத்த காயம்
அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM
அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம் புகளூா் தாலுகா குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் ரவி (48). இவா், தனது இருசக்கர வாகனத்தில் தென்னிலை கூடலூா் பகுதியைச் சோ்ந்த மருதமுத்து (74) என்பவரை பின்னால் அமர வைத்து நொய்யலில் இருந்து க.பரமத்தி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். க.பரமத்தி தங்கவேல் பவா்லூம் அருகே சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரவி, மருதமுத்து இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் க.பரமத்தி போலீஸாா் லாரி ஓட்டுநா் ஆபிரகாம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.