தென்னிலை அருகே லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
தென்னிலை அருகே நின்ற லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தென்னிலை அருகே நின்ற லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த பாவியரந்தல் பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் காா்த்தி (38) என்பவா் புதன்கிழமை லாரி ஓட்டி வந்தாா். கோவை - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது உடல்சோா்வு காரணமாக தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டி பிரிவு சாலையில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னான் மகன் கணேசன் (38) என்பவா் ஓட்டு வந்த காா் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில் மனைவி அங்கயற்கண்ணி (53) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த கணேசன் பலத்த காயமடைந்து கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். தென்னிலை காவல் ஆய்வாளா் தில்லைக்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
Advertisement