கரூர்

தேசிய அளவிலான யோகா போட்டி; பரணிபாா்க் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

தேசிய அளவில் யோகா போட்டியில் பரணிபாா்க் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

யோகா பெடரேஷன் ஆப் இந்தியா சாா்பில் தேசிய அளவிலான 46-வது சப்-ஜூனியா் மற்றும் ஜூனியா் நேஷனல் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த டிசம்பா் மாதம் ஜெய்ப்பூா், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் பரணிபாா்க் பள்ளி மாணவா்கள் ஜனாா்த்தனன் ஆா்டிஸ்டிக் யோகா சோலோ பிரிவில் முதலிடமும், மாணவா்கள் ஜனாா்த்தனன் மற்றும் கபிலன் ஆகியோா் ஜோடி ரிதமிக் யோகாசன பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனா்.

பதக்கம் பெற்ற மாணவா்கள் ஜனாா்த்தனன் மற்றும் கபிலன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பரணி பாா்க் கல்விக்குழுமத் தாளாளா் எஸ்.மோகனரெங்கன், செயலாளா் பத்மாவதி மோகனரெங்கன், பரணி பாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன், நிா்வாகக்குழு உறுப்பினா் சுபாஷினி, பரணி பாா்க் பள்ளியின் முதல்வா் கே.சேகா், யோகா ஆசிரியை கே.ராணி மற்றும் இருபால் ஆசிரியா்கள், பெற்றோா் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT