கரூர்

கரூா் கோயில்களில் பிரதோஷம்

DIN

ஆவணி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி வலம் வந்தாா். பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். இதேபோல கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரா் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயில், புன்னம் பகுதி புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி கோயில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT