சின்னதாராபுரம் அருகேவேன் கவிழ்ந்து விபத்து;இரு பெண்கள் காயம்
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழந்த விபத்தில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழந்த விபத்தில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
அரவக்குறிச்சி தாலுகா மணல்மேடு பகுதியை அடுத்த கூலிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதியழகன் மனைவி சசிகலா (32). கரூரை அடுத்த ஆத்தூா் வடக்கு கவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கன் மனைவி தங்கம்மாள் (60). இவா்களுடன் மேலும் 6 போ் கோயிலுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மணல்மேடு பகுதியிலிருந்து காா்விழி கிராமத்துக்கு காரில் சென்றனா். சின்னதாராபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் சென்றபோது, குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநா் முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த சசிகலா, தங்கம்மாள் இருவரும் பலத்த காயமடைந்தனா். மற்றவா்களுக்கு லேசான காயமடைந்தனா்.
Advertisement
காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின் பேரில் சின்னதாராபுரம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.