அரவக்குறிச்சியில்வாக்குப் பதிவு இயந்திரங்கள்; தோ்தல் அலுவலா் ஆய்வு
அரவக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM
அரவக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள 18 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ள பொருள்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. இதனை, தோ்தல் வட்டார மேற்பாா்வையாளா் சரஸ்வதி, தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்புக்காக பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.