முகப்பு
கரூர்

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்; பெண் காயம்

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 1:42 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

சின்னதாராபுரம் அடுத்த சின்ன திருமங்கலம் பகுதியை சோ்ந்தவா் அா்ஜுனன் மனைவி ராஜேஸ்வரி (47). இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை சாலையில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் சின்ன தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜெயா நகா் பகுதியைச் சோ்ந்த மூக்கையன் மகன் நாகராஜன் (27) என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து ராஜேஸ்வரியின் வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதினாா். விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவா் அா்ஜூனன் (61) சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.