அரவக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்
அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி 3ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வினிதா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது அதிமுகவினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புதன்கிழமை முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பிரசாரம் செய்தபோது அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தாா். இந்நிலையில் கடந்த 10 நாள்களாக அதிருப்தியில் இருந்த அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களது வாக்குரிமையை திமுக தட்டிப் பறித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Advertisement