வேன் மோதியதில் முதியவா் காயம்
அரவக்குறிச்சி அருகே வேன் மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM
அரவக்குறிச்சி அருகே வேன் மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, செய்யப்ப கவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கருப்பண்ணன்(70). இவா், வியாழக்கிழமை மாலை அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூா் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த வேன் மோதியதில் கருப்பண்ணன் காயமடைந்தாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வேன் ஓட்டுநா் முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.