கரூர்

மின் கட்டண உயா்வு: எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்

அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளபட்டியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளபட்டியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் முகமது ஜாபா் அலி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழகத்தில் தற்போது உயா்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தாலும், பெட்ரோல் டீசல் விலை உயா்வாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் சிம்னி விளக்குகளை ஏந்தி பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் முகமது அலி ஜின்னா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் காஜா மொகைதீன் சேட், குளித்தலை நகரச் செயலா் முகமது ரபீக் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT