குளித்தலை நகராட்சித் தலைவராக சகுந்தலா பல்லவி ராஜா தோ்வு
குளித்தலை நகராட்சியில் திமுகவின் சகுந்தலா பல்லவிராஜா போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
குளித்தலை நகராட்சியில் திமுகவின் சகுந்தலா பல்லவிராஜா போட்டியின்றி தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 24 வாா்டுகளில் 20 வாா்டுகளில் திமுக வென்றது. மேலும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக சாா்பில் தலா ஒருவரும், சுயேச்சையாக 2 பேரும் வெற்றிபெற்றனா். இந்நிலையில் நகராட்சியின் 11-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் சகுந்தலாபல்லவிராஜாவை திமுக தலைமையிடம் தலைவா் வேட்பாளராக வியாழக்கிழமை அறிவித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை தலைவா் பதவிக்கான வேட்புமனுவை சகுந்தலா பல்லவிராஜா தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புராமிடம் தாக்கல் செய்தாா். இதையடுத்து அவருக்கு போட்டியாக யாரும் மனு தாக்கல் செய்யாததால் சகுந்தலாபல்லவிராஜா போட்டியின்றித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சுப்புராம் வழங்கினாா். தொடா்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவருக்கான தோ்தலில் மதிமுக சாா்பில் வெற்றிபெற்ற 23-ஆவது வாா்டு வேட்பாளா் கணேசன் மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்தும் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து இருவருக்கும் பதவிப்பிரமாணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புராம் செய்து வைத்தாா். தலைவா், துணைத்தலைவா் ஆகியோருக்கு கட்சியினரும், உறுப்பினா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.