முதியவா் விஷம் குடித்துதற்கொலை
வெள்ளியணை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வெள்ளியணை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் உப்பிடமங்கலம் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து(80). விவசாயி. இவா், கடந்த மூன்று ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.